எழுவாய் தமிழே!
தன்மையாய் முன்னிலை
வகித்து-உந்தன்
படர்க்கை விரித்திடு!
இலக்கணம் வகுக்கத்தொல்
காப்பியங்களும்
ஈரடியில்திருக் குறளும்,
நாலடியாய் பாக்களும்,
இன்பம்கொள்ள கலித் தொகையும்,
ஐந்திணை விளங்க நற்றிணையும்
சிறிதுபெரிதென குறுந்தொகையும்,
ஐங்குறுநூறாய் பதிற்றுப்பத்தாய்
ஓங்கிஒலிக்கும் பரி பாடலுடன்
அகம் புறமென விரு
நானூறு பாவகையும்,
எத்தனை யெத்தனை
ஆற்றுப்படைகள் அம்மம்மா!
சிலம்புகளில் அதிகாரமாய்,
மணிகளில் கண்டேன்
மேகலைகள் அந்த
சீவகனுக்கோ சிந் தாமணி
எவர்க்கும்
வளையா பதியாய்
காதிருக் குண்டல கேசியெனும்
ஐம்பெரும்
காப்பியங்கள் அழகழகாய்
எட்டுத்தொகை நூல்களும்
மூவாறுமேன் கணக்கு நூல்களும்
மூவாறுகீழ் கணக்கு நூட்களு மின்னும்
இயைந்ததெல்லாம் இலக்கியமாய்
இடையிடையே இலக்கணமாம்!
அறம்வளர்க்க மொருநூலும்,
அகமுரைக்க வொருநூலும்,
மறம் வளர்க்க வொருநூலு மனி
தமுரைக்க வொருநூலும்,
அடுத்த நற்கெல்லாம் இலக்கணங்கள்
அனைத்தையு முரைக்கும் இலக்கியங்கள்,
மருத்துவ மென்றால்
அதிலுண்டு மாயப் புதுமை
அறிவியல் வெகுவுண்டு,
வானிலை சாத்திரம்
உலகுரைப்போம் நாங்கள்
வாழ்நிலை பக்தியை
யதில் வளர்ப்போம்!
அணுக்களின் நகர்வை யுரைத்திடுவோம்,
அண்டங்கள் கடந்து
படர்ந்திடுவோம்!
சிறகுகள் வேண்டாம்
விரைந்திடுவோம் சிந்தனை
யதிலே பறந்திடுவோம்!
#074 2018/03/05
எழுவாய் தமிழே!
https://www.sigaram.co/preview.php?n_id=300&code=HKV1kXgh
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை படைத்த அருமையான படம். அதில் இருந்து ஒரு பா...
-
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீ...
-
தாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...
-
சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...
-
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்: ஆண்டு விழா நாள் : 28.12.2017 நேர்...
-
வண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...
-
அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து குறள் 01 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒருவரி குறள் விளக்கம் : அகரம்...
-
உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...
-
புலர்ந்திடும் பொழுதில் புலன்பெயராதவள் நினைவுகள் மார்துளைத்த ஈட்டியாய் மனதை வதைக்கிறது நாளும் சாகிறேன் நாட்காட்டியாய் கிழிகிறேன் கரைச...
-
உழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...
No comments:
Post a Comment