Wednesday 11 April 2018

கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!

அதிகாரம் 84
பேதமை 

*******

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை 
(குறள் 837)

****

முட்டாளின் செல்வம்!

****
பணத்தாசை
வெறிபிடித்துப்
பலலட்சம்
சேர்த்துவைத்து
மனத்திலே
அன்பில்லாது
மரம்போன்று
வாழும்மாந்தர்,

காலையில்
எழுந்திருந்து
கண்களில்
பணத்தைஒற்றி
சாமியே
நீதானென்று
சாம்பிராணி
சூடம்காட்டி,

பெற்றத்தாய்
தந்தையேனும்
உற்றதோர்
மனைவியேனும்
தான்பெற்றப்
பிள்ளைக்கேனும்
காட்டாமல்
பணம்மறைத்து,



அப்படி
உள்ளோன்காசை
அடுத்தவர்த்
தின்றுபார்ப்பார்
தன்னுடை
உறவுஇங்கே
தாங்காதுப்
பசியில்வாடும்,

மனத்திலே
அன்புமின்றி
மண்டையில்
அறிவுமின்றி
வாழ்கின்றப்
பேதைக்காசை
வழிச்செல்வோர்
தின்பாரென்றான்!

****

ஏதிலார் - தொடர்பற்ற மற்றவர்.

தமர் - உரிய உறவுகள்.

பேதை - அறிவற்றவர்.

****

உரைநடை விளக்கம்.

*****

தாய், தந்தை, மனைவி மக்களோடு வாழ்ந்தும், மனத்தினில் அன்பும் மண்டையில் அறிவுமின்றி வாழும் பேதை, பொருள்வளத்தில் சிறந்திருந்தபோதும், அப்பொருளை இவனை ஏமாற்றி மற்றவர்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்க, உரிய உறவுகள் அடிப்படை தேவைக்குக்கூட பணம்இன்றி அல்லல் பட்டு வாழநேரும் என்கிறார் நமது அறிவுத்தந்தை.

அப்படியில்லாமல் நாம் ஈட்டியப் பொருளை, நமது உற்ற உறவுகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துப் பயன்படுத்தி நாம் அடுத்தவரிடம் ஏமாறாமல் இருந்து மகிழ்வோடு வாழ்வோம் உறவுகளே.

****

என்றும் அன்புடன்
இனிய உறவுடன்...

என் வணக்கமும் வாழ்த்துகளும்!

எல்லாநேரமும்
உங்கள்நினைவுடன் ...
கவிஞர் .
மானம்பாடி புண்ணியமூர்த்தி 

#090/2018/SIGARAMCO
11/04/2018
கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
https://goo.gl/onqHNF
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 


#090/2018/SigarambharathiLK
11/04/2018
கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்! 
https://goo.gl/QsFZ11 
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம் 


No comments:

Post a Comment

Popular Posts