Tuesday 3 April 2018

இயற்கை போற்றுக!

கருத்து வரும் மேகம் கண்டு
கவலை கொள்ளும் தாய் மனம்
கண்ணி மைக்கும் நேரத் திலே
காலம் மாற்றும் மண் மணம்!

பேரி ருளாய் வந்து நின்று
பெரும ழையாய் மாறி டுமோ
காற்று வந்து கருமேகம்
கலைந்தே சென்றி டுமோ?

அன்ற லர்ந்த மலர்க ளுடன்
அது போன்றே சிரித் திருக்கும்
பிஞ்சு மனக் கனவு களின்
பெருங் கோலம் கலைந்தி டுமோ ?



கணங் கணமாய் வாழ்வி னிலே
'கண்டங் கள்' கடப்பதுதான்
பெண் பேதை கேட்டு வந்த
பெரு வரமோ அறியேனே!

வேண்டி வந்த நேரத் தில்
வேடிக் கை காட்டி நின்று
வேண் டாத பொழுதி னிலே
பொழிவ திலே என்ன சுகம்?

தாக்க வந்த தடையெல் லாம்
தாங்கிக் கடந்து வந்தேன்
பொங்கி வரும் வேளை யிலே
போக்க ழித்து விடவேண் டாம்!

பொறுத்தி டுவீர் குறையெல் லாம்
போற்றி டுவோம் என்றென் றும்
இன்னுமொரு சுழிக் காற்றை
யெம்மி தயம் தாங்கா து!

இயற்கை வள மென்றும்
இனி நாங்கள் காத்தி டுவோம்
ஈசன் திருவ ருளை
என்றும் வேண்டி டுவோம்!

-K.Balaji
Jan 09 2016
9 PM

கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் இக்கவிப்படைப்பு அவரது 'OWN COMPOSITIONS - TAMIL' என்னும் வலைத்தளத்திலும் கவிஞரினால் வெளியிடப்பட்டுள்ளது. 
-நன்றி 

இயற்கை போற்றுக! - OWN COMPOSITIONS - TAMIL 

#086/2018/SIGARAMCO 
2018/04/03
இயற்கை போற்றுக!   
https://www.sigaram.co/preview.php?n_id=312&code=SmGCvneo  
பதிவர் : பாலாஜி 
#தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை 
#SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #NATURE #BAALAJI
#சிகரம்


#086/2018/SigarambharathiLK
2018/04/03
இயற்கை போற்றுக!   
https://newsigaram.blogspot.com/2018/04/IYARKAI-POTRUGA.html  
பதிவர் : பாலாஜி 
#தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை 
#SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #NATURE #BAALAJI
#சிகரம்

No comments:

Post a Comment

Popular Posts