Friday, 10 March 2017

யார் அவன்?

அழகின் உருவம் அவன்
ஆள்வதில் வல்லவன் அவன்
இன்சொல் வர்மன் அவன்
ஈகையிற் சிறந்தோன் அவன்
உயர்ந்த மனிதன் அவன்
ஊர்பல வென்றான் அவன்
எதிரிக்கு யமன் அவன்
ஏசி அறியான் அவன்
ஐக்கெலாம் ஐ அவன்
ஒப்பில்லா அன்பினன் அவன்
ஓம்நமசிவாய என்பான் அவன்

யார் அவன்?
காலங்கள் கடந்து நிற்கும்
இராஜராஜேஸ்வரம் அமைத்தவன் அவன்...
குந்தவையின் அன்பு தம்பி அவன்...
இராஜராஜ சோழன் எனும்
அருண்மொழிவர்மன் தான் அவன்

......கீர்த்தீ ........
( கிருத்திகா )

1 comment:

  1. மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Popular Posts