Friday 10 March 2017

யார் அவன்?

அழகின் உருவம் அவன்
ஆள்வதில் வல்லவன் அவன்
இன்சொல் வர்மன் அவன்
ஈகையிற் சிறந்தோன் அவன்
உயர்ந்த மனிதன் அவன்
ஊர்பல வென்றான் அவன்
எதிரிக்கு யமன் அவன்
ஏசி அறியான் அவன்
ஐக்கெலாம் ஐ அவன்
ஒப்பில்லா அன்பினன் அவன்
ஓம்நமசிவாய என்பான் அவன்

யார் அவன்?
காலங்கள் கடந்து நிற்கும்
இராஜராஜேஸ்வரம் அமைத்தவன் அவன்...
குந்தவையின் அன்பு தம்பி அவன்...
இராஜராஜ சோழன் எனும்
அருண்மொழிவர்மன் தான் அவன்

......கீர்த்தீ ........
( கிருத்திகா )

1 comment:

  1. மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Popular Posts