Thursday 16 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 3

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் மூன்றாம் பகுதி உங்களுக்காக இங்கே:

முதலாம் பகுதி:


இரண்டாம் பகுதி:


மூன்றாம் பகுதி : 

சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.

முனீஸ்வரன் : நானும் ஏற்கிறேன் ஏற்கனவே கலந்த சொற்களை மாற்ற முயற்சிப்பது முடியாது இனி கலக்காமல் தடுக்க முயல்வதே நன்று.

மாற்றம் என்பதை நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள். சொல்லுங்க மாற்றம் என்றால் என்ன?

சிகரம் பாரதி : அம்மா என்பது இலகுவானது. ஆகவே மம்மியை நிராகரித்து விடலாம். மேலும் மம்மி எனும் சொல் அறுபது எழுபது ஆண்டுகள் நம்மோடு பயன்பாட்டில் இருந்ததல்ல. பயன்பாட்டில் சொல் இருந்த காலத்தையும் கவனத்திற் கொள்ளலாம்.

ஜெகஜோதி : வளர்ச்சி என்பது வேறு தனித்துவம் எனபது வேறு. தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்டது. புதுப்பித்துக்கும் வழி கொண்டது.

முனீஸ்வரன் :  இன்னும் 20 வருடங்கள் கழித்து மம்மி வழக்கு சொல்லாகிவிட்டால்.?

சிகரம் பாரதி : ஐந்தாம் தமிழ்ச்சங்கம் உருவாக வேண்டும். தமிழை வளப்படுத்த வேண்டும்.

ஜெகஜோதி : நம் தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து கடவுள்களின் பெயரையும் பாருங்கள். சமஸ்கிருதத்தின் மீது வைத்திருந்த மரியாதையா இல்லை தமிழில் பெயர் இல்லையா ?

கவின்மொழிவர்மன் : சமஸ்கிருதம் தமிழின்  உட்பிரிவாக்கூட இருக்கலாம், பிராமி,தமிழி போல.

சிகரம் பாரதி : மொழி பயன்பாட்டுக்கு கடினமாக இருந்தால் இவ்வாறான அபத்தங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது.இது. கோவில்களில் மந்திரங்களை தமிழில் ஓதச்செய்ய வேண்டும்

முனீஸ்வரன் :  ம் இல்லை நண்பா, அம்மா ஒன்றும் பயன்பாட்டிற்கு சிரமாக இல்லையே பின் ஏன்?

ஜெகஜோதி : அறியாமை, தாழ்வு மனப்பான்மை,

சிகரம் பாரதி : ஆங்கிலம் பல இடங்களிலும் பயன்பாட்டு மொழியாக இருக்கிறது. அலுவலகம் , பாடசாலை போன்ற இடங்களில். இதைச் சரி செய்தால் இவ்வாறான சொற்களை தமிழில் பயன்படுத்த பழகிவிடுவார்கள்.

முனீஸ்வரன் : பாடதிட்டங்களில் மாற்றம் வேண்டும்

ஜெகஜோதி : திரைத் துறை ஒரு முக்கிய காரணம்.

கவின்மொழிவர்மன் : ஐயா அம்மா என்பதே சீன மொழியில் மம்மா,பப்பா, வேறு மொழிகளில் அம்மே,மாதா, இப்படி பலவற்றில் தமிழோடு இயைந்தே வருகின்றன.

சிகரம் பாரதி : மேலும் பாமர மக்கள் ஆங்கிலக் கல்வியையே விரும்புகின்றனர். காரணம் ஆங்கிலத்தில் கற்றால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை.

சக்தி : சமஸ்கிருதம் உட்பிரிவு இல்லை தமிழுக்கு சமமான மொழி

முனீஸ்வரன் : அடிப்படையில் மாற்றம் வேண்டும்

சிகரம் பாரதி : திரைத்துறையை திருத்த ரசிகர்கள் தயாராக இல்லை.

ஜெகஜோதி : ரசிகர்கள் ஏன் திருத்த வேண்டும். நடிப்பது தமிழ் மொழியில் . அவர்கள் தான் திருந்த வேண்டும்.

சங்கி : திரைத்துறையை தாக்குவது ஏன்🤔 அதிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எத்தனையோ பேரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் தோழா.

கார்த்திகேயன் ரமணி : இல்லை !! திரைப்படம் நிறைய உள்ளன மேற்கோள் காட்ட!! அதே போல் எதிர்ப்பும் இருக்க தான்.....இருக்கு.

சிகரம் பாரதி : அதை நாம் ரசிக்கிறோம். அவர்களைக் கொண்டாடுகிறோம். பின் எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

சங்கி : அது ஒரு பொழுதுபோக்குத் துறை. அதை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். அதில் இருக்கும் தமிழ் பற்று உடையவர்களை மக்கள் தான் தூக்கி வைக்க வேண்டும்.  மக்கள் ரசிக்கும்...அதிகமாக செல்லும் படங்கள் தான்... இயக்குனர்கள் தான் வெற்றி பெறுகின்றனர்.

ஜெகஜோதி : இருக்கலாம் தோழி. ஆனால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம் . நம் ஊர் முதலவர்களை பார்த்தால் உங்களுக்கே புரியும். சில இல்லை இல்லை பல  நடிகர் நடிகைகள் பேட்டி கொடுக்கும் போது பாருங்கள். எனக்கு அப்படியே கோவம் வரும்.

கவின்மொழிவர்மன் : எவ்வளவோ உண்டு எடுத்துரைக்க!
இங்கு  அதை கூறின் பலருண்டு மறுத்துரைக்க!
அதனால் நான் வரவில்லை கருத்துரைக்க,!
எவருளரோ எம் தமிழை பிறவற்றிலிருந்து பிரித்துரைக்க!

பாலகுமரன் : அம்மா வழக்கில் உள்ளது எனவே மம்மி வேண்டாம். ஆனால் குளம்பி வழக்கில் இல்லை எனவே காபி ஏற்போம்.

கவின்மொழிவர்மன் : குளம்பி என்றால் வீட்டுல சேர்த்துக்கமாட்டாங்களா?

ஜெகஜோதி : தனி ஒருவன் திருந்துவது  எளிதா? தனி மனிதர்கள் சேர்ந்ததே சமூகம். தனி ஒருவன் திருந்தினால் வழி வழியாக சமூகம் திருந்தும்.

பாலகுமரன் : வழக்கில் உள்ளதை மாற்றி எல்லோரும் ஏற்கும் படி குளம்பி ஆக்க  முடியுமா?

முனீஸ்வரன் : காபி யை குழம்பியாக ஏற்க நானும் மறுக்கிறேன். ஆனால் இதே நிலை நாளை அம்மாவிற்கும் வந்துவிட கூடாது என்கிறேன்.

சங்கி : சரி தான் தோழா. திரைத் துறை பெரியது.... பரப்பளவு பெரியது. நடிகைகள்..உண்மை  தான். ஆனால் இப்பொழுது...குறும் படங்கள், இணையத்தள ஒளிக்கோப்புகள் (online videos) மிகவும் பிரபலமாகி வருகின்றன...இனி வருவோர் தமிழ் பற்றியும், மொழியை கெடுக்காமலும் நிறைய செய்யலாம். இருப்பதை திருத்துவது கடினம். தமிழ் படத்தில் நடிக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என திடமான முறை வரும் வரை.

கார்த்திகேயன் ரமணி : பட தயாரிப்பு மற்றும் இயக்குநர் கையாளும் விதத்தில் உள்ளது.

ஜெகஜோதி : துறை பெரியது, உண்மை.  சோறு போடும் மொழிக்கு துரோகம் செய்யும் முன் யோசிக்க வேண்டும்.

சங்கி : நிச்சயம். பல பேர் அறியாத விஷயம். அதுவும் ஓரு மிகப்பெரிய வணிக துறை. கலை துறை என்பது பேச்சுக்கு. சிலர் மட்டும் அந்த நோக்கத்துடன் இருக்கிறார்கள். சிலர் சில சமயம் இருக்கிறார்கள். மற்ற படி முழுமையாக அப்படி இருக்க சாத்தியம் இல்லை.

பாலகுமரன் : தமிழ் நாட்டில் பிறந்தவர்களே சுலபமாக மதிப்பெண்கள் பெற வேண்டுமென தமிழை தேர்வு செய்யாமல் ஒதுக்கிவிடுவது என்ன நியாயம்?

விவாதம் தொடரும்...

No comments:

Post a Comment

Popular Posts